2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில். 174 பேர் கைது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் சிறு குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 பேரும், குடிபோதையில் கலகம் விளைவித்த 09, மதுபோதையில் வாகனம் செலுத்திய 08, சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயம் வைத்திருந்த 02, சட்டவிரோத சாராயம் வைத்திருந்த 02, திருடிய குற்றச்சாட்டில் 11, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 10 பேர், சூழல் மாசடைதல் 08, கொலை குற்றச்சாட்டில் 02, அடிகாயம் ஏற்படுத்திய 34, வீதி விபத்து 06, ஏனைய குற்றங்களுக்காக 37 பேருமாக 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .