2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.

நீதவான் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தியாவின் ஜனதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 05 ரோலர் படகுகளில் வந்து காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேற்படி இந்திய மீனவர்கள் 19 பேரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவர்களை கைதுசெய்த காங்கேசன்துறை கடற்படையினர், யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனர்.
 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .