2025 ஜூன் 21, சனிக்கிழமை

திருட்டு சந்தேக நபர்கள் ஐவர் கைது; 20 லட்சம் பெறுமதியான கணினி உதிரிபாகங்கள் மீட்பு: டி.ஜ.ஜி

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். நகரின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 20 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

வடமாகாண சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் காமினி சில்வாவின் கட்டளையின் படி பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான குழுவினர் எஸ்.பி.ரணவீர, சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர, குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் விக்கிரமராய்ச்சி மற்றும் பொலிஸ் உதவியாளர்களின் உதவியுடன் திருட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் திருடிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். நல்லூர், குருநகர், நாவலர் வீதி போன்ற பகுதிகளில் கடந்த 3 கிழமைகளின் முன்னர் தொலைபேசி நிலையங்கள் மற்றும் தொலைபேசி வேலை சார்ந்த நிறுவனங்களில் திருடப்பட்ட கணினி உதிரிப்பாகங்கள் மற்றும் கணினி பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கடத்தி செல்லப்பட்ட முச்சக்கர வண்டி உட்பட பல்வேறு பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் 5பேரும் குருநகர், கோவில் வீதி, கோப்பாய் மற்றும் மானிப்பாய் கட்டுடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், பொலிஸ் விசாரணையின் பின்னர் இன்று யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்னர் என்றும் யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .