2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 22 பேருக்கும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 22 பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் எஸ்.எம்.ஆர்.மகேந்திரராசா உத்தரவிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் 22 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.எம்.ஆர்.மகேந்திரராசா முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோதே, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்தியாவின்  கோட்டைப்பட்டினம், ஜனதாப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து  06 படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் 22 பேரும், யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  நேற்று சனிக்கிழமை  (28) இரவு  கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரையும்  யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர்  ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து  ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான்  எஸ்.எம்.ஆர்.மகேந்திரராசா முன்னிலையில் இந்திய மீனவர்கள் 22 பேரையும் ஆஜர்படுத்திய நிலையிலேயே இவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .