2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிவில் சமூக பாதுகாப்பு அமைப்பில் 22,275 அங்கத்தவர்கள் உள்ளனர்- பூஜித

Super User   / 2014 மார்ச் 07 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்திலுள்ள சிவில் சமூக பாதுகாப்பு அமைப்புகளில் 22,275 அங்கத்தவர்கள் உள்ளனர் என்று வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று (07) தெரிவித்தார்.

'கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல் தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கைவேந்தன் கலா மன்றத்தில் இன்று (07) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் தெரிவிக்கையில்,

சிவில் சமூக பாதுகாப்பு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தேசிய பாதுகாப்பும், கிராம மட்ட குற்றச்செயல்களை தடுப்பதாகும்.

வடமாகாணத்தில் 7 பொலிஸ் பிராந்தியங்களும் 41 பொலிஸ் நிலையங்களும் உள்ளன. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் கீழ் சிவில் சமூக பாதுகாப்பு அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.

சமூகத்தால் மதிக்கப்பட்டவர்களே சிவில் சமூக அங்கத்தவர்களாகவுள்ளனர். இவ் அமைப்பினால் முதலில் நமக்கிடையில் நம்பிக்கை ஏற்படுகின்றது. இனபேதமின்றி நாம் அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

மீண்டும் ஒரு பேரழிவினை நாம் விரும்பவில்லை. அந்தவகையில் இந்த அமைப்பினை நாம் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களே பொறுப்புக்கூற வேண்டும். வெளியிடத்தில் உள்ளவர்கள் பொறுப்புக்கூறமுடியாது.

அவரவர் ஊர்களில் இடம்nறும் ஊழல் தொடர்பான குற்றங்களில் இருந்து கிராம மட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் வரை இந்த சிவில் சமூக பாதுகாப்பு அமைப்பின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .