2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கொன்சலிற்றா வழக்கு 24 வரை ஒத்திவைப்பு

Super User   / 2014 ஜூலை 10 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எம்.றொசாந்த்


யாழ். குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் (22) மரணம் தொடர்பான சட்ட வைத்தியதிகாரி சி.சிவரூபனின்  விசாரணை அறிக்கை, எதிர்வரும் 24 ஆம் திகதி வாசிக்கப்படும் என்று அறிவித்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.

மேற்படி வழக்கு இன்று வியாழக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்ட வைத்தியதிகாரி மன்றில் ஆஜராகி வாக்கு மூலமளித்தார்.

மேலும், யாழ்ப்பாணப் பொலிஸார் கொன்சலிற்றாவின் தொலைபேசி பாவனை தொடர்பான  3 மாதகால அறிக்கையை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (10) சமர்ப்பித்தனர்.

 யாழ். குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 ஆம் திகதி ஆயர் இல்லத்திற்கு முன்னால் கொன்சலிற்றாவின் உறவினர்கள் கொன்சலிற்றாவின் உடலினை வைத்து போராட்டம் செய்தனர்.

மறைக்கல்வி கற்பிப்பதற்குச் சென்ற கொன்சலிற்றாவினை பாதிரியார்கள் பாலியல் தொந்தரவு செய்து கொன்லிற்றாவின் மரணத்திற்கு காரணமாகினர்கள் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி மேற்படி வழக்கு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொன்சலிற்றாவின் தாய் “எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் பாதிரியார்கள் இருவரே காரணம்” எனவும், தந்தை “எனது மகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம்” என தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

கொன்சலிற்றா யாழ். ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி கற்பித்து வந்த ஆசிரியை ஆவார்.

கொன்சலிற்றா கன்னித் தன்மை இழக்கவில்லையெனவும், அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்தியதிகாரி கடந்த மே 12 ஆம் திகதி மன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்;கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, பாதிரியார்கள் சார்பில் சட்டத்தரணியான அன்டன் புனிதநாயகமும் ஜெரோம் கொன்சலிற்றாவின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ். அர்ச்சுனா தலைமையிலான குழுவினரும் ஆஜராகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .