2025 ஜூன் 18, புதன்கிழமை

முத்திரையிடாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்திய 28 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 15 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் 28 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் நிறுத்தல் அளவைகள் முத்திரையிடுதல் அலுவலகத்தினால் கடந்த 8ஆம் 9ஆம்  10ஆம் திகதிகளில் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும்; உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போதே முத்திரையிடப்படாக நிறுத்தல் அளவைக் கருவிகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் 28 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ். நகர், வேலணை, பருத்தித்துறை, சாவகச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவைக் கருவிகளை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.  அத்துடன், மரக்கறிச் சந்தைகள், இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகளிலும்; நிறுத்தல் அளவைக் கருவிகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்தச் சோதனையின்போது வெதுப்பகங்களிலும் பாணின் நிறை குறைவாக அளக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .