2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வீட்டிலிருந்து 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொழும்புத்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் ரூபா 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை திருப்பட்டுள்ளன.

இதுபற்றி தெரியவருவதாவது,

மேற்படி வீட்டின் உரிமையாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.
தொடர்ந்து உரிமையாளர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகைகள், வீட்டுப்பொருட்கள் உள்ளிட்ட  ரூபா 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டுப்போயிருப்பதை அவதானித்தார். 

இது தொடர்பாக வீட்டு உரிமையாளாரினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குற்ற ஒழிப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .