2025 ஜூன் 25, புதன்கிழமை

யாழில் 3 நீதிமன்ற கட்டிடத் தொகுதிகள் திறப்பு

Super User   / 2014 ஜனவரி 07 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று நீதிமன்ற கட்டிடத் தொகுதிகள் நாளை வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளன.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பங்குபற்றுதலோடு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் இந்த கட்டிடங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன.

158 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி காலை 9 மணிக்கும் 175 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மல்லாகம் நீதிமன்ற கட்டிடத் தொகுதி முற்பகல் 11.30 மணிக்கும் 127 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஊர்காவற்றுறை நீதிமன்றத் தொகுதி பிற்பகல் 2.30 மணிக்கும் திறந்துவைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வுகளில் நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா உட்பட நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .