2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கடற்சுழியில் சிக்கிய 3 மீனவர்கள் கரை திரும்பினர்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கர்ணன்

கடற்சுழியில் அகப்பட்ட  மீனவர்கள் மூவர்  நேற்று புதன்கிழமை  அதிகாலை ஒரு மணியளவில் நீந்தி வந்து வல்வெட்டித்துறை கடற்கரையை அடைந்துள்ளனர்.

வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணன் சூரியகுமார் (வயது 32), அருமைராசா அன்பழகன் (வயது 26), ஆறுமுகம் வசந்தகுமார் (வயது 30) ஆகிய மீனவர்களே இவ்வாறு நீந்திக் கரை சேர்ந்துள்ளனர்.

மேற்படி மீனவர்கள் மூவரும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை  மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ளனர்.

இவ்வாறு மேற்படி மீனவர்கள் மூவரும் சென்ற படகு பலாலி கடற்கரையிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட கடற்சுழியில் அகப்பட்டதுடன், படகும் முற்றாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த நிலையிலேயே மேற்படி மீனவர்கள் மூவரும் நீந்தி வல்வெட்டித்துறைக் கடற்கரையை அடைந்தனர்.

கடற்கரையில் மயக்க நிலையிலிருந்த இவர்களை காங்கேசன்துறைப் பொலிஸார் முதலுதவிச் சிகிச்சை அளித்து அவர்களின் வீடுகளில் கொண்டு சென்று விட்டனர்.

கடற்சுழியில் அகப்பட்ட  படகும் வலைகளும் கடலினுள் மூழ்கியதினால் 700,000 ரூபா நஷ்டம் மேற்படி மீனவர்கள் மூவருக்கும் ஏற்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மீனவ கூட்டுறவுச்சங்க செயலாளர் எஸ்.மதியழகன் தெரிவித்துள்ளார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .