2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் இன்று மட்டும் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர்

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் நாய்க்கடிக்கு இலக்காகிய 30 பேர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவு புள்ளிவிபரத் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரையிலான 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாய் கடிக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேவேளை,கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களின் கடிக்கு இலக்காகியவர்கள் தாமதிக்காது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2010/2011 ஆம் ஆண்டுகளில் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு 16 பேரும் 2011 ஆம் ஆண்டு 14 பேரும் நாய்க்கடிக்கு இலக்காகி மரணித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு அம்பாறையில் ஒருவரும், மட்டக்களப்பில் ஐவரும், திருகோணமலையில் இருவரும் பலியாகியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பேரும் மரணமடைந்துள்ளனர்.

வடக்கை பொறுத்தவரையில் 2010 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை இவ்விரு மாகாணங்களிலும் 2011 ஆம் ஆண்டு 25 ஆயிரத்து 903 பேருக்கு விசர் நாய் கடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அம்பாறையில் 5,638 பேருக்கும், மட்டக்களப்பில் 3222 பேருக்கும், திருகோணமலையில் 2244 பேருக்கும் விசர் நாய் கடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு வடக்கில் யாழ்ப்பாணத்தில்  5073 பேருக்கும், கிளிநொச்சியில் 6378 பேருக்கும், மன்னாரில் 1692 பேருக்கும்,முல்லைத்தீவில் 1320 பேருக்கும், வவுனியாவில் 396 பேருக்கும் விசர் நாய் கடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு மாகாணங்களிலும் கட்டாக்காலி மற்றும் வளர்ப்பு நாய்களுக்கென 2010 ஆம் ஆண்டு 77 ஆயிரத்து 932 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் கிழக்கு மாகாணத்திற்கு 35015 தடுப்பூசிகளும் வடக்கு மாகாணத்திற்கு 42,916 தடுப்பூசிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு  கிழக்கு மாகாணத்திற்கு 47,008 தடுப்பூசிகளும் வடக்கிற்கு 49,378 தடுப்பூசிகளும்  விநியோகிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் பொது சுகாதார மிருக வைத்திய சேவைகளின் புள்ளிவிபரவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0

  • kavi Wednesday, 27 February 2013 10:41 AM

    மனிதன் கடிப்பதை விடவா

    Reply : 0       0

    rima Wednesday, 27 February 2013 12:13 PM

    இதுக்கு என்ன பரிகாரம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .