2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 05 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 30 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து படகு ஒன்றில் வந்த 6 மீனவர்களும், புதுக்கோட்டை ஜனதாப் பட்டினம் பகுதியிலிருந்து 6 படகுகளில் வந்த 24 மீனவர்களுமே இவ்வாறு திங்கட்கிழமை (4) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்கள், காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதினைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .