2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் கைதான இந்திய மீனவர்கள் 30பேருக்கும் 17 வரை விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். அனலைதீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் என்.தம்பிமுத்தன் இன்று (12) உத்தரவிட்டார்.

இந்திய புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணம் பகுதிகளிலிருந்து 8 படகுகளில் 30 மீனவர்கள் யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளையில், காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 30 மீனவர்களும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி மேற்படி 30 மீனவர்களையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த மீனவர்களின் 8 படகுகளையும் காங்கேசன்துறை கடற்படையினரின் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுமாறும், மீனவர்களினால் பிடிக்கப்பட்ட மீன்களை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .