2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 32 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், சுமித்தி தங்கராசா

யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இந்திய மீனவர்கள் 32 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை  (03) இரவு கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி  தெரிவித்தார்.

இந்தியாவின் நாகப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து 08 படகுகளில் வந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04)  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .