2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழில் இந்திய மீனவர்கள் 38 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 30 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்


யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 38 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பணிப்பாளர் என்.கணேஷமூர்த்தி தெரிவித்தார். 

இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.

இந்தியாவின்  இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 06 படகுகளில் வந்த 38 இந்திய மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .