2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 51 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 51 பேரையும்; எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி நேற்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்;கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  51 மீனவர்களையும் நெடுந்தீவுக்கு அண்மித்த  கடற்பரப்பில் நேற்றையதினம் (29) அதிகாலை  கைதுசெய்த  காங்கேசன்துறை கடற்படையினர், இவர்களை யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி மீனவர்களின் 07 படகுகளும் கைப்பற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .