2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 51 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 51 பேரையும்; எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி நேற்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்;கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  51 மீனவர்களையும் நெடுந்தீவுக்கு அண்மித்த  கடற்பரப்பில் நேற்றையதினம் (29) அதிகாலை  கைதுசெய்த  காங்கேசன்துறை கடற்படையினர், இவர்களை யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேற்படி மீனவர்களின் 07 படகுகளும் கைப்பற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .