2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். மாவட்டத்தில் 613 ஊழியர்களுக்கு அரச நியமனம்

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா
 
வடமாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் சிற்றூளியர்களாக கடமையாற்றிய 613 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.
 
இந்த அரச நியமனம் வழங்குவதற்காக வடமாணத்தில் 1317 பேர் தெரிவு செய்ய்ப்பட்டுள்ளனர். இதில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 613 பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
வடமாகாணசபைக்குட்பட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய அமைச்சுக்களின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண அமைச்சின் செயலாளர்கள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன், பிரதேச சபைத்த தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .