2025 ஜூன் 21, சனிக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தும் குற்றச்சாட்டில் நாளொன்றுக்கு 7 – 10 பேர் வரை கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 37 பேரை கைதுசெய்துள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் நாளொன்றுக்கு 7 முதல் 10 வரையான வாகன சாரதிகள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுகின்றதெனவும் பொலிஸார் கூறினர்.

புள்ளிவிபர அடிப்படையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவர்களின் எண்ணிக்கை யாழ். மாவட்டத்திலேயே அதிகூடிய நிலையிலிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .