2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இராமேஸ்வர மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்ககமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த 12 இராமேஸ்வர மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, குறித்த 12 மீனவர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பினுள் கடந்த 10ஆம் திகதி அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இராமேஸ்வர மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின் கடந்த 11ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், குறித்த மீனவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை (இன்று) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், குறித்த 12 மீனவர்களும் நேற்று வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X