2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'குளங்களை புனரமைக்க 414 மில்லியன் ரூபாய் தேவை'

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 81 சிறிய குளங்களை புனரமைப்பதற்கு 414 மில்லியன் ரூபாய் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கமநல சேவை நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து, சிறிய மற்றும் நடுத்தர பாரிய நீர்ப்பாசனக்குளங்களின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்;பட்டு வருகின்றன.இந்நிலையில், தற்போது 81 குளங்களை புனரமைப்பதற்கு 414 மில்லியன் ரூபாய் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 20 சிறிய குளங்களும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 10 சிறிய குளங்களும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 27 சிறிய குளங்களும் துணுக்காய் பிரதேசத்தில் 12 சிறிய குளங்களும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 12 சிறிய குளங்களும் என கமநல சேவை நிலையங்களின் கீழ் 81 குளங்களையும் புனரமைப்பதற்கு 414 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதேவேளை, மாவட்டத்தில் சேதமடைந்;து காணப்படும் பாண்டியன்குளம், புதுக்குடியிருப்பு, வெலிஓயா உள்;ளடங்கலாக நான்கு கமநல சேவை நிலையங்களை புனரமைக்க தலா 11 மில்லியன் ரூபாயும் மாவட்டத்தில் மூன்று உரக்களஞ்சியங்களை அமைப்பதற்கு தலா 3 மில்லியன் ரூபாயும் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X