2025 ஜூலை 23, புதன்கிழமை

'நந்திக்கடலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நட்டஈடு'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நந்திக்கடல் வெட்டி விடப்படாமையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

டிசெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் 20 ஆம் திகதிக்கும் இடையில் நந்திக்கடல் வெட்டி அளவுக்கதிகமாக தேங்கிய நீர் கடலுக்கு விடப்படுவது வழமை. இம்முறை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே அதிகளவான மழை பெய்தமையால் நந்திக்கடலில் அதிகளவான நீர் சேர்தமையால், அருகிலிருந்த வயல் நிலங்கள் அழிவடைந்தன.

சுமார் 100 ஏக்கர் நெற்செய்கை இதனால் அழிவடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .