2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'பாதை' நேரத்தில் மாற்றம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 11 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இடம்பெறும் பாதை சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்துறை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, காலை 7.30 மணிக்கு காரைநகரிலிருந்து ஊர்காவற்துறைக்கு பாதை சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச செயலருக்கு அரச உத்தியோகத்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இவ் நேரமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான பாதை சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கற்பித்தல் நேரம் 7:30க்கு மாற்றப்பட்டிருந்ததை அடுத்து கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 14ஆம் திகதியிலிருந்து படகு பாதையில் நேரமாற்றத்தினை, வீதி அபிவிருத்த அதிகார சபை மாற்றி வழங்கியிருந்தது.

இதனால் சிரமங்களை எதிர்கொண்ட அரச உத்தியோகத்தர்கள், காலை 7:30 மணிக்கு ஒரு சேவையினைப் பெற்றுத்தருமாறு, ஊர்காவற்துறை பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தனர்.

இதன் அடிப்படையில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்று பொறியியலாளருடன் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மேற்கொண்ட கலந்துரையாடலினை அடுத்து திங்கட்கிழமையிலிருந்து (09) இருந்து 7:30 மணிக்கு ஒரு படகு பாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X