2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மண் அகழ்ந்தவர் கைது

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, கம்பர்மலைப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வயல் மண் அகழ்ந்தவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கம்பர்மலை பகுதிக்கு சென்ற பொலிஸ் குழு, உழவு இயந்திரத்தில் வயல்வெளியில் மண் அகழ்ந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அனுமதிபத்திரமின்றி மண் அகழ்ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

உழவு இயந்திரத்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து வந்த பொலிஸார், சந்தேக நபருக்கு எதிராக பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X