2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வறிய மாணவர்களுக்கு உதவி

Niroshini   / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட பகுதியில் வறிய மாணவர்களுக்கு கற்றல் வசதிகளை ஏற்படுத்திய உறங்காவிழிகள் அமைப்பின் அறிவொளி கல்வி நிலையத்தின் பரிசளிப்பு நிகழ்வும் நூல் வெளியீடும் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு முதல் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பல கிராமங்களில் இலவச கற்றல் நிலையங்களை அமைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சேவையாற்றும் இவ் அமைப்பானது அம் மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி கற்றல் உபகரணங்களையும் வழங்கி வழங்கி வைத்திருந்தது.

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சி. கஜேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் செயலளார் செ. கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X