2025 ஜூன் 26, வியாழக்கிழமை

101 வயதுடைய முதியவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

101 வயதுடைய முதியவர் நேற்று (04) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்.சாவகச்சேரி தனங்கிளப்பை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான குறித்த முதியவர், 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி பிறந்தார். இவர் கடந்த ஆண்டு தனது 100 ஆவது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

இந்நிலையில், கடந்த ஓரிரு மாதங்களாக சுகவீனமுற்று இருந்த நிலையில் நேற்று (04) மதியம் உயிரிழந்தார்.

இவருக்கு 11 பிள்ளைகளும், 33 பேரப்பிள்ளைகளும், 12 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .