2025 ஜூன் 18, புதன்கிழமை

13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வல்ல: தமிழரசுக் கட்சி

Super User   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் 13ஆவது திருத்தச் சட்டமும் இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என தமிழரசு கட்;சி அறிவித்துள்ளது.

'நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களை நாமும் அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். இருப்பினும் இந்த அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கோ அல்லது ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கோ ஒருபோதும் செவிசாய்க்கவில்லை' என்று தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

"நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் 13ஆவது திருத்தச் சட்டமும் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல. அதாவது, 13 திருத்த சட்டம் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எங்களுடைய எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துகொள்ளவில்லை. என்றாலும் கூட அதில் சில விடயங்கள் இருக்கின்றன.

தற்போது அரசாங்கம் கையாளுகின்ற உத்தி ஓர் தந்திரோபாயமான உத்தியாக நாங்கள் பார்;க்கின்றோம். நாங்கள் வேண்டாம் என்று சொல்லும் விடயத்தினை நாங்கள் நீக்குவோம் என சொல்லுவதன் மூலமாக நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம்.

13ஆவது திருத்த சட்டம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வோம் என்ற நிலைப்பாட்டினை கொண்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் எதையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.

யாழ். மாவட்டத்தில் உள்ள 437 கிராம சேவை அலுவலர்கள் இருக்க வேண்டும். இருப்பினும் இதில் இன்னமும் 30 வீதமான வெற்றிடங்கள் இருக்கின்றன. அவற்றினை நிரப்புங்கள் மக்கள் கஸ்டப்படுகின்றார்கள் என்ற விடயம் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்படுகின்றது.

அடிமட்ட சேவையாளர்களின் தேவை இருக்கின்ற போது. அந்த வெற்றிடங்களை நிரப்புமாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் இருக்கின்றபோதும், அவற்றினை நாங்களும் கேட்ட போது, அரசாங்கம் அவற்றினை செய்யவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை"என்றார்.

You May Also Like

  Comments - 0

  • aj Thursday, 28 February 2013 06:58 AM

    யப்பாடா... இப்போ சரி இந்த தெளிவு வந்து இருப்பது சந்தோசம். செத்த 13 சட்டம் ஒருபோதும் தமிழர்களுக்கு தீர்வு ஆகாது. இதை உலக நாட்டுக்கும் இந்த அரசுக்கும் தெளிவாக சொல்லவேண்டியது இந்த கட்சிகளின் கடமை. இங்க ஒரு பேச்சி.. வெளிநாட்டில் ஒரு பேச்சி இல்லாமல் ஒரே கொள்கையோடு இருக்கவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .