2025 ஜூன் 18, புதன்கிழமை

2 கோடி ரூபா நட்டம்: உதயன் ஆசிரியர் முறைப்பாடு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

உதயன் பத்திரிகை மீதான தாக்குதலில் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்தார்.

யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் பத்திரிகை அச்சிடும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி தாரர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில், தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்யும் போதே, இத்தாக்குதலினால், தமது நிறுவனத்திற்கு  2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .