2025 ஜூன் 21, சனிக்கிழமை

2010ஆம் ஆண்டு திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

பருத்தித்துறை பொலிஸ் பகுதியில் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற திருட்டு சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருட்டுப் போனதாக கூறப்படும் தங்க நகைகளில் ஒரு பகுதியும் சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27ஆம் திகதி வீடு உடைத்து சுமார் நான்கு லட்சத்தி எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டதாக பொலிஸில் உரிமையாளரினால் முறையிடப்பட்டு இருந்தது.

பொலிஸார் தொடர் புலன் விசாரணையை கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி பருத்தித்துறையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதைத் தொடர்ந்து களவாடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் - பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர் படுத்தியதைத் தொடர்ந்து நீதிமன்றினால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .