2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

படையினரால் புனரமைக்கப்பட்ட தமிழ் அறிஞர்களின் சிலைகள் திறந்துவைப்பு

Super User   / 2010 நவம்பர் 29 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கர்ணன்)

புலோலி மந்திகைச் சந்தியிலுள்ள, தமிழ் அறிஞர்களான சதாவதானி  கதிரவேற்பிள்ளை, கந்த முருகேசனார் ஆகியோரின் உருவச்சிலைகள் படையினரால் புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டன.

52 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதத்சிங்க இச்சிலைகளை திறந்துவைத்தார்.

514 ஆவது படையணியின் தளபதி லெப். ஜெனரல் திசாநாயக்க, 3 ஆவது சிங்க படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் அமுனுகம, பருத்தித்துறை பிரதேச செயலாளர ஆர். வரதீஸ்வரன், கரவெட்டி பிரதேச செயலாளர் ச.சத்தியசீலன், பருத்தித்துறை ஸ்ரீ சாரதா சேவாச்சிரமத்தின் சுவாமி சித்போதானந்தா, மற்றும் மதத்தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இவ்வைபத்தில் கலந்துகொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X