Menaka Mookandi / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நாவலர் வீதி மற்றும் ராசாவின் தோட்டம் பகுதிகளுக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அப்பகுதிகளின் சுற்றுச் சூழல் தொடர்பில் ஆராய்ந்தார்.
நேற்று மாலை கொழும்பில் இருந்து யாழ். வந்த அமைச்சர், யாழ் மாவட்டத்தில் குப்பைகளை வீதியோரங்களில் கொட்டுவதால் ஏற்படுகின்ற சூழல் மாசுறுதல் தொடர்பில் கண்காணித்திருந்தார்.
இதனடிப்படையில் இன்று அப்பகுதிகளுக்குச் சென்ற அமைச்சர் வீதியோரங்களில் குப்பை கூழங்கள் அகற்றப்படாமை தொடர்பில் நேரில் கண்டறிந்து அவை தொடர்பில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன் பின்னர் யாழ் மாநகர சபை முதல்வருடன் உடனடியாகத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்படி குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பணிப்புரை வழங்கியதுடன் யாழ் மாநகர சபை எல்லைக்குள் வீதி ஓரங்களிலும் பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டி வைக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் பணித்தார்.
அத்துடன் குப்பை கூழங்களை அகற்றும் பணிகளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் கால் கவசம் மற்றும் கையுறைகளைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இவ்வாறு குப்பைகளைக் கொட்டி சூழலை மாசுபடுத்துவோர் தொடர்பில் சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025