2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் அரச மரக்கூட்டுத்தாபத்தின் மாவட்டப் பணிமனைகள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி  மாவட்டங்களில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் மாவட்டப் பணிமனைகள் நாளை திறந்துவைக்கப்படவுள்ளன.

நீண்டகாலத்தின் பின்னர் வடக்கில் இந்தக் கூட்டுத்தாபன மாவட்டப் பணிமனைகளை மீண்டும் இயங்குவதற்காக இந்தப் பணிமனைகள் திறந்து வைக்கப்படவுள்ளதாக அரச மரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  

நாளைய திறப்பு விழா நிகழ்வுகளில் சுற்றாடல்த்துறை அமைச்சர் அநூர பிரியதர்சன யாப்பா, சுற்றாடல்த்துறை பிரதி அமைச்சர் அப்துல் காதர், பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச மரக்கூட்டுத்தாபனத் தலைவர் எஸ்.அமரசிங்க மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மரக்கூட்டுத்தாபன அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அரச மரக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X