2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீசாலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன், கவிசுகி, தாஸ்)

மீசாலை, சிற்றம்பலம் வீதியிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மீசாலைப் பகுதியை சேர்ந்த  28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அவரது தந்தை அடையாளம் காட்டியுள்ளார்.

குறித்த நபர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து இருவரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் இவர் தனியார் காணியொன்றிலிருந்து சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X