Suganthini Ratnam / 2011 ஜனவரி 16 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று சனிக்கிழமை மாலை கரையொதுங்கியதாக வல்வெட்டித்துறை மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்தே குறித்த சடலம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இந்திய மீனவரது சடலமாக இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுபவதுடன், அவரது இடது கையில் கு. குப்புசாமி குமார் பச்சை குத்திய அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவராக சடலமாக மீட்கப்பட்டவர் இருக்கலாமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025