2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மானிப்பாயில் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Super User   / 2011 ஜனவரி 17 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மானிப்பாயை சேர்ந்த பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை இரவு 8.20 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான ஸ்ரீபாலசுந்தரம் நினோஷா என்பவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவராவர்.

இவர் வீட்டு வாசலில் நிற்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் காலில் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X