2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மிதி வெடிகளை அகற்றும் பணியாளர்களுக்கு விண்ணப்பம் கோரல்

Super User   / 2011 ஏப்ரல் 30 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். குடா நாட்டில் மிதி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்த ஏற்கனவே மிதி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களையும், புதியவர்களையும் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டமொன்றை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மகேஸ்வரி நிதியத்தினூடாக முன்னெடுத்துள்ளார்.

யாழ். குடா நாட்டில் இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாதிருக்கும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களை துரித கதியில் மீளக்குடியமர்த்துவதற்கும், விளை நிலங்கள் மற்றும் காணிகளில் இன்னமும் அகற்றப்படாதிருக்கும் மிதி வெடிகளை விரைவில் அகற்றி இக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கிலும் அமைச்சர்; இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தற்போது சில தொண்டு நிறுவனங்களும் இராணுவத்தினரும் மிதி வெடிகளை அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அவை போதுமானதாக இல்லாத காரணத்தினால் மக்களது மீள் குடியேற்றங்களில் தொடர்ந்து தாமத நிலை காணப்படுவதை அவதானத்தில் கொண்டதன் பிரகாரமே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிதி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தவென மேலும் பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு முன்வந்துள்ளார்.

இதன் பிரகாரம் மேற்படி பணியில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் 'மிதி வெடிகளை அகற்றும் பணி, மகேஸ்வரி நிதியம், இல. 110, 4ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X