Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 12 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம், தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு வடமாகாண வைத்தியசாலைகளுக்கும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றுவதற்குமான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் வடமாகாண ஆளுநர் இவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைப்பார்.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்நிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என யாழ் பிராந்நிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .