2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாநகர அபிவிருத்திக்கான கிராம மட்ட கலந்தாய்வரங்கு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 14 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகர அபிவிருத்திக்கான கிராம மட்டக் கலந்தாய்வரங்கு இன்று திங்கட்கிழமை ஜெ - 61 கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மாநகர முதல்வர் உரை நிகழ்த்துகையில், கிராமிய மட்டங்களிலிருந்து அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் மக்களின் அபிவிருத்தியில் யாழ்.மாநகர சபை தொடர்ந்தும் அர்பணிப்புடன் சேவையாற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்விற்கு மாநகர சபை உறுப்பினர்கள் அப்பகுதி கிராம மக்கள், மாநகர சபை உத்தியோகஸ்தர்கள், அப்பகுதி கிராம சேவகர், மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஜெசாக் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .