Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமெனவும் அவ்வாறில்லாவிடின் மாபெரும் மக்கள் சக்திப் போராட்டம் ஜனநாயக ரீதியில் வெடிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்ப் போன உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி காணாமல்ப் போனவர்களின் உறவினர்கள் யாழ். பஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காணாமல்ப் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்கிக் கதறியழுதனர். அவ்விடத்திற்கு சென்றபோதே நடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்படி தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இங்கு மேலும் தெரிவிக்கையில்...
இந்த அரசாங்கம் தமிழ் மக்களை அநாதைகளாக வீதியில் அலையவிடுகிறது. மக்கள் வீடுகளில் நிம்மதியாக வாழமுடியாதவர்களாக தவிக்கின்றார்கள்.
சிறைச்சாலைகளில் அல்லது இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உண்மை நிலையை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடத் தவறும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் சாத்வீகப் போராட்டம் முடுக்கிவிடப்படும்' என்றார்.
'காணாமல்ப் போனவர்களின் விபரங்களை வெளியிடு', 'தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை முன்வை', 'அரசியல்க் கைதிகளை விடுதலை செய்', 'ஜனநாயக உரிமைகளை நசுக்காதே', 'காணாமல்ப் போனவர்களின் பெற்றோரை வதைக்காதே' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.
இதேவேளை, இவ் ஆர்பாட்டத்தில் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களில் சிலர் -பொலிஸ் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் 'நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல. செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள்' என்று பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து யாழ்.பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இவ்விடயத்தில் தலையிட்டு ஊடகவியலாளர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
janoovar Saturday, 10 December 2011 09:36 PM
ஐயா நீங்க எதுக்குத்தான் போராட்டம் நடத்தல...
Reply : 0 0
jeeva Sunday, 11 December 2011 12:29 AM
ஆர்பாட்டம் , போராட்டம் , என்று செல்லாமல் . சமாதான வழியில் சென்றால் எல்லாவற்றையும் வெல்லலாம் . அரசியல் லாபத்துக்காக மக்களையும் ஆட்டுகின்றீர்களே... இது சரியாய் படல.
Reply : 0 0
sunder mani Sunday, 11 December 2011 01:50 AM
போராட்டம் இருந்தால் தானே நம் பிரச்சனை உலகிற்கு தெரிவிக்க முடியும்.அற வழியில் போராட்டம் தேவை.
Reply : 0 0
suppu Sunday, 11 December 2011 04:31 AM
தனிநாடு கேட்டதால் தானே பிரச்சனை தொடங்கியது, நாமாகவே பிரச்சனையை உருவாக்கினோம். உங்களது வாயில எப்போதும் போராட்டம். சிறுபிள்ளைகளும் குட பலஹிவிட்டது ஐயயா. தயவுசெய்து மாத்துங்கள். பாவம் பொதுமக்கள். "ஓடும் நீரோடு சென்று கடவுங்கள்".
Reply : 0 0
appaavi Sunday, 11 December 2011 06:10 PM
சுப்பு அவர்களே உங்கள் குடும்பத்தி ல் எல்லோரும் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.அதுதான் இப்படி சொல்லுகிறீர்கள்.அந்த தாய்மார்களின் கதறலை கேட்டீர்களா? போராட்டம் நடத்தினால்தானே ஒரு முடிவு தெரியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
4 hours ago
4 hours ago