Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தில் வாடிக்கையாளர் நலன்கருதி புகையிலை சார்ந்த எந்தவிதமான பொருள் விற்பனையிலும் ஈடுபடாத விற்பனை நிறுவன உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கௌரவிக்கப்பட்டனர்.
யாழ்.பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரவுக்குட்பட்ட 33 விற்பனை நிறுவன உரிமையாளர்கள் இன்றைய தினம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன், வடமாகாண சுகாதார பணிப்பாளர் திருமதி ஆர்.யூட், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் யாழ்.பிராந்திய சேவைகள் பணிமனை வைத்தியர்கள் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். இரவீந்திரன் வடமாகாணத்தில் புகையிலை செய்கையின் காரணமாக வளமான மண்வளம் எதிர்காலத்தில் பாதிப்படையும் அபாய சூழல் எற்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் புகையிலை செய்கையின் காரணமாக ஏற்படும் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
புகையிலையை உற்பத்தி செய்வதினால் மண்வளம் பாதிப்பதோடு மனித உடலுக்கும் அது அதித கேடு விளைவிப்பவையாக இருக்கிறது. அதன் காரணமாக விவசாயிகள் புகையிலைக்குப் பதிலாக மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும். இது உடனடியாக சாத்தியப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் இது குறித்து ஒரு செயற்திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரையாற்றுகையில், யாழ்.விவசாயிகள் தனித்துவமானவர்கள். யாழின் மாம்பழம் உலக சந்தையில் விற்பனைக்காக செல்கின்றன. யாழின் புகையிலைச் செய்கையை மற்றும் ஏற்றுமதியையிட்டு நாங்கள் பெருமைப்பட முடியாது. ஏனெனில் அது மனித உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது
யாழ்.விவசாயிகள் புகையிலைக்குப் பதிலாக பொருளாதார ரீதியில் மாற்று பயிர்களை நடுவதற்கான திட்டத்தினை முன்னெடுக்க எடுக்க வேண்டும். அத்தோடு யாழில் விவசாயத்துறை யுத்ததிற்கு பின்னர் புத்துயிர் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
4 hours ago