Suganthini Ratnam / 2012 ஜனவரி 02 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவர் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் யாழ். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த இளைஞரொருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி அவரிடம் 3 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் யாழ். இளைஞர்களை கனடாவுக்கு அனுப்பிவைக்கும் முகவராக செயற்பட்டு வந்ததாகவும் இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025
suthan Monday, 02 January 2012 08:31 PM
பட்டும் அறிவு வராதவர்களை என்ன செய்வது? குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்கள் இருக்கும் வரைக்கும் இந்த செய்திகளுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Dec 2025
17 Dec 2025