2025 மே 17, சனிக்கிழமை

பண மோசடியில் ஈடுபட்ட நீர்கொழும்பு முகவர் யாழில் கைது

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 02 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பிவைப்பதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டின் பேரில்  நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவர் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் யாழ். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த இளைஞரொருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி அவரிடம் 3 இலட்சத்து 46 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.    

கைதுசெய்யப்பட்ட நபர் யாழ். இளைஞர்களை கனடாவுக்கு அனுப்பிவைக்கும் முகவராக செயற்பட்டு வந்ததாகவும் இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0

  • suthan Monday, 02 January 2012 08:31 PM

    பட்டும் அறிவு வராதவர்களை என்ன செய்வது? குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்கள் இருக்கும் வரைக்கும் இந்த செய்திகளுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .