2025 மே 17, சனிக்கிழமை

யாழ். அரச ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான இலகு கடன் திட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான இலகு கடன் திட்டம் வடமாகாண வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ். பிராந்திய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

'வீடமைப்பு இலகு கடன் வசதி வாய்ப்பு' தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

வீடமைப்புக்கான 5 இலட்சம் ரூபா இலகு கடன் அரசாங்கத்தினால் குறைந்த வட்டிவீதத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளன.  அரசாங்க  சேவையில் உள்ள வீடுகள் அற்றவர்கள் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலகு கடன் திட்டத்தை பெற விரும்புபவர்கள் வீடமைப்பு தொடர்பான தங்கள் விண்ணப்பங்களை வடமாகாண வீடமைப்பு அதிகார சபையில் ஒப்படைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .