2025 மே 17, சனிக்கிழமை

நித்தியானந்த குருக்கள் கொலை வழக்கு: சந்தேக நபர் பிணையில் விடுதலை

Kogilavani   / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சங்கானையில் கடந்த 11.12.2010 ஆம் திகதி நித்தியானந்த குருக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து அவரிடமிருந்த தங்க நகைகளைக் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 2இவது சந்தேக நபர் பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது

நிந்தியானந்தக் குருக்கள் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கடந்த 2011 காலப்பகுதியில் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இவர்களில் 2ஆவது சந்தேக நபரான சுப்பரமணியம் சிவரூபன் தொடர்பாக அவரது சட்டத்தணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ். மேல் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்திருந்தார்.

இதையடுத்து,  2ஆவது சந்தேக நபருக்கு 1 இலட்சம் காசுப் பிணையும் தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேவேளை, சந்தேக நபர் மாதத்தில் இறுதி வாரத்தில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

அரசாங்கத்தின் சாரிபில் சட்டத்தரணி வி. திருக்குமரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .