2025 மே 17, சனிக்கிழமை

யாழ். குடாக் கடலில் அட்டை பிடித்த நான்கு குருநகர் மீனவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 05 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாக் கடலில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி அட்டை பிடித்த குருநகர் கடற்றொழிலாளர்கள் நால்வர் கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு யாழ். கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த குருநகர் மீனவர்கள் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நான்கு குரநகர் மீனவர்களை தலா ரூபா 9,000 அபராதம் கட்டுமாறும் அவர்களது கடற்றொழில் சட்டவிரோத உபகரணங்களைப் அழிக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா பிராந்திய நீரியல்வளத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .