2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இரு ஆசிரியர்களின் தங்கச்சங்கிலிகள் அபகரிப்பு

Suganthini Ratnam   / 2012 மே 07 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நல்லூர் சங்கிலியன் சிலை வீதியில் பகல் வேளையில் இரு ஆசிரியர்களின் தங்கச்சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை முறையிடப்பட்டுள்ளது.

வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த இரு ஆசிரியர்களையும் வழிமறித்த இனந்தெரியாத நபர்கள், அவர்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலிகளை  அபகரித்துச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .