2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்,எஸ்.கே.பிரசாத்,ஜெ.டானியல்)


யாழ்ப்பாணம், சுன்னாகம் மதவடியில் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சுன்னாகம் மயிலனியைச் சேர்ந்த எஸ்.சங்கர்  என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்தவர்ளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த மினிபஸ் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. 

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார்  மினி;பஸ்ஸையும் சைக்கிளையும்  பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றதுடன், இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மினிபஸ்ஸின் சாரதி தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படங்கள்:- ஜெ.டானியல்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .