2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் அத்தியாவசிய தேவைக்கு மேல் கோழி வளர்ப்பை மேற்கொள்பவர்களை பதியுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

10க்கும் மேற்பட்ட கோழி வளர்ப்பினை மேற்கொள்பவர்கள் மாநகர சபையிடம் அனுமதி பெற்று அதற்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ். மாநகரசபை சுகாதார குழு தலைவர் எஸ்.விஜயகாந் புதன்கிழமை தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடைமுறைகள் தொடர்பாக இன்று காலை யாழ். மாநகர சபையில் ஊடகவியலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைகள் மற்றும் வியாபார நோக்கத்திற்காக கோழி வளர்ப்பினை மேற்கொள்பவர்கள் மாநகர சபையில் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு பெற தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனுமதிகள் இன்றி கோழி வளர்ப்பினை மேற்கொள்ளும் போது துர்நாற்றம் மற்றும் நோய்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் முகமாக யாழ். நகர சபையிடம் அனுமதி பெற்று கோழி வளர்ப்பினை மேற்கொள்வது அவசியமானதொன்றாக கருதப்படுகின்றது.

எனவே, 10க்கும் மேற்பட்ட கோழி வளர்ப்பினை மேற்கொள்பவர்கள் யாழ். மாநகர சபையிடம் அனுமதி பெறுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .