2025 மே 21, புதன்கிழமை

யாழில் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காக மின்விநியோகம் தடைப்படும்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (ஜெ.டானியல்)
யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் சில பிரதேசங்களில் மின்விநியோகம்  தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் புன்னாலைக்கட்டுவன், அச்செழு, அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப்பிரதேசம் ஆகிய இடங்கள் தவிர்ந்த யாழ்.குடாநாடு முழுவதும், வியாபாரிமூலை, அல்வாய், சக்கோட்டை, பருத்தித்துறை நகரப்பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

10,12,14 ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் பண்டைத்தரிப்பு, சில்லாலை, நிச்சாமம், விளான், இளவாலை, மாதகல், சாந்தை, வடலியடைப்பு, இடும்பன் பிரதேசம், தொல்புரம், சுழிபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

11, 13 ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் புத்தூர், ஆவரங்கால், வாதரவத்தை, வீரவாணி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X