2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். மாவட்டத்தில் வலிப்பு நோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)

யாழ்.மக்களிடையே வலிப்பு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் நரம்பியல் குழுவின் ஏற்பாட்டில் வலிப்பு நோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று யாழ்.நகரில் நடைபெற்றது.

இவ் ஊர்வலத்தை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது காலை 8 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலை முன்றில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக ஸ்ரான்லி வீதியை சென்றடைந்து, அங்கிருந்து பலாலி வீதியூடாக யாழ். பொதுநூலகத்தினை வந்தடைந்தது.

குறித்த ஊர்வலத்தில், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ரஞ்சினி ஹமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் வலிப்பு நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலளாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ப.விக்னேஸ்வரன், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் உட்பட மனநல வைத்திய நிபுணர் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார பணிமணை உத்தியோகஸ்த்தர்கள், இராணுவத்தினர், பாடசாலை மாணவர்கள்; மற்றும் இராணுவ படை மாணவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .