2025 ஜூன் 21, சனிக்கிழமை

பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் குழு யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த பொதுநலவாய  நாடுகளின் பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளது.

காலை 9.00 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த இக்குழுவினரை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பொதுநலவாய  நாடுகளின் பிரதிநிதிகள் குழுவுக்கு யாழ். நகரிலுள்ள ரிக்கோ ஹோட்டலில் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் வடமாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் விளக்கமளித்தார்.

இக்குழுவினர் மீள்குடியேற்றம், மக்களின் வாழ்வாதாரம், மிதிவெடி அகற்றுதல் ஆகியன தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டனர்.
இவர்களுடனான சந்திப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாணசபையின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி, ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .