2025 ஜூன் 21, சனிக்கிழமை

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


காணாமல் போனோர் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிரந்திய காரியாலயத்தில் ஆரம்பமாகியது.

2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தவர்களுக்கான கடிதங்கள் அனுப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள தவறுவது ஏன் என்று காணாமல் போனோர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், 2008, 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் காணாமல் போனோர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுமா எனவும் காணாமல் போனோர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விசாரணைகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .